வட அமெரிக்கா

உலகிலேயே முதல்முறையாக கனடா எடுத்துள்ள தீர்மானம்

உலகிலேயே முதல்முறையாக கனடா புகையிலை கட்டுப்பாட்டை குறைக்க விசேட தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, ஒவ்வொரு சிகரெட்டிலும் புகைபிடிப்பதால் புற்றுநோய் வரும் என்ற எச்சரிக்கை வாசகத்தை அச்சிட கனடா முடிவு செய்துள்ளது.

ஒவ்வொரு சிகரெட்டிலும் எச்சரிக்கை வாக்கியங்களை அச்சிடும் உலகின் முதல் நாடாக கனடா மாறியுள்ளது.

“புகையிலை புற்றுநோயை உண்டாக்குகிறது” மற்றும் “ஒவ்வொரு சிகரெட்டிலும் விஷம்” ஆகியவை கனடா அச்சிட விரும்பும் இரண்டு எச்சரிக்கை வாக்கியங்கள்.

இதனை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு ஆகிய இரு மொழிகளிலும் அச்சிட கனடா முடிவு செய்துள்ளது. இளையோர் சிகரெட் பயன்படுத்துவதை தடுப்பதே இதன் நோக்கம் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது.

இந்த சட்டங்கள் ஜூலை 2024 முதல் அமுல்படுத்தப்பட வேண்டும். 2026க்குள், ஒவ்வொரு சிகரெட்டிலும் மேலும் 06 எச்சரிக்கை வாக்கியங்கள் அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் 2035ம் ஆண்டுக்குள் சிகரெட் பயன்பாட்டை 5 சதவீதமாக குறைக்க கனடா முயற்சித்து வருகிறது. கனடாவில் ஒவ்வொரு ஆண்டும் புகைப்பிடிப்பதால் 48,000 பேர் இறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

(Visited 15 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content