பிரான்ஸில் காணாமல் போன இலங்கையர்
பிரான்ஸில் நடைபெற்ற சர்வதேச பொலிஸ் சங்கத்தின் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள சென்ற இலங்கை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தலைமறைவாகி உள்ளார்.
மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் அதிகாரி, மே மாதம் இலங்கை திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தார்.
உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பிறகு அவர் திரும்பாமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டது.
அந்த விசாரணைகளுக்கமைய, பொலிஸ் கான்ஸ்டபிள் பிரான்ஸிசில் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேல்மாகாண பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினால் குறித்த உத்தியோகத்தர் பதவியிலிருந்து விலகியதாகக் கருதப்படும் அதிகாரியாக அறிவிக்கும் சுற்றறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
(Visited 10 times, 1 visits today)





