இஸ்ரேல் தாக்குதல் : 24 மணிநேரத்துக்குள் காசாவில் ஐவர் பலி!
காசாவில் கடந்த 24 மணிநேரத்துக்குள் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் ஐவர் பலியாகியுள்ளனர். ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.
பாலஸ்தீன சுகாதார அமைச்சு மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது.
அதேவேளை, 2023 ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 72 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தற்போது போர் நிறுத்தம் அமுலில் இருந்தாலும் இஸ்ரேல் அவ்வப்போது தாக்குதல்களை நடத்திவருகின்றது.
போர் நிறுத்தகாலப்பகுதியில் மட்டும் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.





