போர் பதற்றம் – அமெரிக்காவின் நிலைப்பாடு குறித்து போலந்து பிரதமர் கேள்வி!
சமீபகாலமாக ரஷ்யா ஐரோப்பிய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்ற நிலையில் அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து போலந்து பிரதமர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் (Donald Tusk), நேட்டோ ஒப்பந்தங்களில் விவரிக்கப்பட்டுள்ளபடி அமெரிக்கா விசுவாசமாக இருக்கத் தயாராக உள்ளதா என்பதே ஐரோப்பாவின் மிகப்பெரிய, மிக முக்கியமான கேள்வி” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேட்டோ மீதான தனது நிலைப்பாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவதற்கும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
போலந்துக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் குறித்து தனக்கு ‘எந்த மனத்தடையும் இல்லை’ என்று கூறிய அவர், போலந்தை ஐரோப்பாவின் சிறந்த மற்றும் நெருங்கிய கூட்டாளியாகக் கருதுகிறது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு போலந்திற்குள் ரஷ்யா ஆளில்லா விமானங்களை ஊடுருவியபோது, கிரெம்ளின் சுமார் 20 ஆளில்லா விமானங்களை போலந்து வான்வெளியை மீறி அனுப்பியதற்கு நேட்டோ காட்டிய மெத்தனமான எதிர்வினையை அவர் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





