வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவு
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 85.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக அதிக அளவில் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை சுதந்திரத்திற்கு பின் மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அதிகபட்ச வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது எனவும், மேற்கு வங்கம், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் சல்யூட் எனவும் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் இரவு 8 மணி நிலவரப்படி 84.69% வாக்குப்பதிவாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




