ஆப்பிரிக்க பயணத்தில் போப் லியோ – டிரம்புடனான சர்ச்சைக்கு உறுதியான பதில்
போப் லியோ XIV, தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக அங்கோலாவுக்குச் சென்றுள்ளார்.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை அவர் முக்கியமாக எடுத்துக் காட்டவில்லை.
1992ஆம் ஆண்டு இரண்டாம் ஜான் பால் மற்றும் 2009ஆம் ஆண்டு பதினாறாம் பெனடிக்ட் ஆகியோருக்குப் பிறகு அங்கோலாவிற்கு வருகை தரும் மூன்றாவது போப்பாண்டவராக லியோ உள்ளார்.
அவர் தலைநகர் லுவாண்டாவில் அதிபர் ஜோவோ லோரென்கோவைச் சந்தித்து உரையாற்றவுள்ளார்.
இந்தப் பயணத்திற்கு முன்பு, கேமரூனில் மூன்று நாட்கள் தங்கி இருந்தார். அங்கோலாவில் மக்கள் தொகையில் சுமார் 44 சதவீதம் பேர் கத்தோலிக்கர்கள் ஆவர்.
மத்திய கிழக்கு போர் குறித்து லியோ தெரிவித்த கருத்துகள் மற்றும் போரை மதரீதியாக நியாயப்படுத்துவதை அவர் விமர்சித்தது, ட்ரம்பின் எதிர்ப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே, ட்ரம்ப், போப்பை கடுமையாக விமர்சித்ததுடன், சமூக வலைதளங்களில் வெளியிட்ட ஒரு படமும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த போப் லியோ, தாம் பயப்படவில்லை என்றும், போர் குறித்து தொடர்ந்து பேசுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், வத்திக்கான் நெறிமுறை விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ள நிலையில், அமெரிக்க கத்தோலிக்க ஆயர்கள் மாநாடு, போப்பின் கருத்துகளை ஆதரித்துள்ளது.
போர் என்பது தற்காப்பு நோக்கில் மட்டுமே இருக்க வேண்டும் என்ற திருச்சபையின் நிலைப்பாட்டுடன் போப்பின் கருத்துகள் இணங்குகின்றன என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.





