புதிய உச்ச தலைவருக்கு நடந்தது என்ன? ஈரான் விளக்கம்!
ஈரானின் புதிய உச்ச தலைவர் Mojtaba Khamenei நலமுடன் இருப்பதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி Abbas Araghchi தெரிவித்தார்.
ஈரானின் புதிய உச்ச தலைவர் தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார் என அமெரிக்கா மற்றும் இஸரேல் என்பன அறிவித்துள்ள நிலையிலேயே ஈரான் தரப்பில் இருந்து மேற்படி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, சர்வதேச எரிசக்தி போக்குவரத்திற்கு முக்கிய வழியான ஹார்முஸ் நீரிணை, ஈரானின் எதிரி நாடுகளைத் தவிர மற்ற அனைத்து நாடுகளுக்கும் திறந்தே இருக்கும் எனவும் கூறினார்.
மத்திய கிழக்கில் அமெரிக்கத் தளங்களை மட்டுமே ஈரான் குறிவைப்பதாகவும் வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ஈரான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.




