உலகம் செய்தி

ஆம்புலன்ஸ்கள், அவசர மையங்கள் சேதம் – தெஹ்ரானில் பெரும் அழிவு

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் சுமார் 460 பேர் உயிரிழந்ததுடன், தெஹ்ரான் அவசர சுகாதார சேவைகள் துறையின் துணைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்கள் முன்னெடுத்ததிலிருந்து 4,309 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், கடந்த பெப்ரவரி மாதம் 28 முதல் தலைநகரில் நடந்த தாக்குதல்களில் 18 ஆம்புலன்ஸ்கள் மற்றும் 18 அவசரகால சிகிச்சை மையங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ஈரான் முழுவதும் இடம்பெற்ற தாக்குதல்களில் 1,200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 10,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதல்கள் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை தொடர்ந்தும் நிலவுகிறது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!