உலகம்

ஏவுகணை தாக்குதல்: குவைத்திலுள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா!

குவைத்தில் உள்ள தமது நாட்டு தூதுரகத்தை அமெரிக்கா மூடியுள்ளது. அங்கிருந்து அனைத்து பணியாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தூதரகத்தில் உள்ள ரகசியத் தரவுகள் மற்றும் கோப்புகளை முழுமையாக அழிக்குமாறு தூதரக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குவைத் வான்பரப்பில் ஊடுருவிய ஏவுகணைத் தாக்குதலை அந்த நாட்டு இராணுவம் முறியடித்ததைத் தொடர்ந்து இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலால் சில வாகனங்கள் சேதமடைந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், அமெரிக்கா தனது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Dila

About Author

You may also like

உலகம் விளையாட்டு

சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேறிய ரியல் மாட்ரிட் மற்றும் ஏசி மிலன்

  • April 19, 2023
ரியல் மாட்ரிட் சாம்பியன்ஸ் லீக் அரையிறுதியில் செல்சிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது, அது 4-0 என்ற மொத்த வெற்றியைப் பெற்றது, போராடிக்கொண்டிருந்த லண்டன்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
error: Content is protected !!