இலங்கை செய்தி

ஜப்பான் நிறுவனத்திடமிருந்து ட்ரோன் கேமராக்கள் நன்கொடை

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனம் , வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு ட்ரோன் கேமராக்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

JICA நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் இலங்கையில் நிலையான வீதிப் போக்குவரத்திற்காக மண்சரிவுத் தடுப்பு திறனை வலுப்படுத்துதல் திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டது.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், JICA பிரதிநிதி நோரு மட்சுனோஷிட்டா (Mr. Noru Matsunoshita), வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் திரு. ரி. பாஸ்கரனிடம் அடையாள ரீதியாக ட்ரோன் கேமராவைக் கையளித்தார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர்

“பெருந்தெருக்களை அண்மித்த பகுதிகளில் மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் போது, எம்மால் அந்த இடங்களுக்குச் செல்ல முடியாததால் தகவல்களைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன.

இந்த ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்துவதன் மூலம், அனர்த்தம் ஏற்பட்ட இடங்களின் காட்சிகளை எளிதாகவும் துல்லியமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் தரவுகளைக் கொண்டு வீதித் திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு (Planning & Design) பணிகளை விரைவாகவும் எளிதாகவும் முன்னெடுக்க முடியும்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!