இஸ்ரேலின் பிடியில் பாலஸ்தீன பத்திரிக்கையாளர்கள் : உடல், உள ரீதியாக துன்புறுத்தல்!
இஸ்ரேலால் சிறையில் அடைக்கப்பட்ட பாலஸ்தீன பத்திரிகையாளர்கள், வழக்கமான அடி, பட்டினி மற்றும் பாலியல் வன்கொடுமை உட்பட, பரவலான துஷ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பத்திரிகையாளர்களைப் பாதுகாக்கும் குழு (CPJ) இன்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலின் மெகிடோ சிறையில் உள்ள ஒரு சிறிய அறையில் வீரர்கள் தங்களது ஆடைகளை அகற்றி, தடி மற்றும் பிற பொருட்களால் தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் சாட்சியம் வழங்கியுள்ளனர்.
தாக்குதல்கள் அவர்களை அவமானப்படுத்த, பயமுறுத்த மற்றும் நிரந்தரமாக வடுவை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவை என்று பாதிக்கப்பட்ட பத்திரிக்கையாளர்கள் விவரித்துள்ளனர்.
குடும்ப உறுப்பினர்களை கொலை செய்வதாக அச்சுறுத்தல், உரத்த இசை மூலம் தூக்கமின்மை மற்றும் கடுமையான எலும்பு முறிவுகள் மற்றும் கண் காயங்களுக்கு சிகிச்சை மறுக்கப்படுவது போன்ற மருத்துவ புறக்கணிப்பு உள்ளிட்ட உளவியல் துஷ்பிரயோகத்தையும் எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.




