மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படும்: ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் உறுதி!
ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் UNDP பிரதிநிதி அலெக்சாண்டர் டி குரூவுடன் Alexander De Croo பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய Dr. Harini Amarasooriya பேச்சு நடத்தியுள்ளார்.
இலங்கைக்கும், ஐ.நாவுக்கும் இடையிலான பலமான ஒத்துழைப்பிற்கும், வெள்ள நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவிகளில் ஐ.நா. வழங்கிய ஆதரவிற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.
அத்துடன், நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் பிரதமர் விளக்கமளித்துள்ளார்.
“ பொதுமக்களின் நம்பிக்கை, நல்லாட்சி மற்றும் நலிவடைந்த சமூகங்களுக்கான பலப்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு ஆகியவற்றின் ஊடாகத் தேசம் கட்டியெழுப்படும்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.” எனவும் ஐ.நா. பிரதிநிதியிடம் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உலக பொருளாதாரமன்ற மாநாடு சுவிட்சர்லாந்தில் நடைபெற்றுவருகின்றது.
இம்மாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் முக்கியத்துவம்மிக்க சந்திப்புகளை நடத்திவருகின்றார். இதன் ஓர் அங்கமாகவே மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.





