குடியரசு தினத்தை முன்னிட்டு இந்தியாவில் உச்ச கட்ட பாதுகாப்பு!
இந்தியாவின் குடியரசு தினத்தை முன்னிட்டு India’s Republic Day சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குடியரசு தினம் எதிர்வரும் 26 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.
இதையொட்டி, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பொலிஸார் மற்றும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. 30 ஆம் திகதிவரை பாதுகாப்பு ஏற்பாடு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
24, 25, 26 ஆகிய 3 நாட்களும் உச்சகட்டபாதுகாப்பாக 7 அடுக்கு பாதுகாப்பு முறை அமுல்படுத்தப்பட உள்ளது.
அதேவேளை, டெல்லி உட்பட பிரதான நகரங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் அண்மையில் நடந்த சில பயங்கரவாத செயற்பாடுகளால் இம்முறை வரலாறு காணாத பாதுகாப்பு அமுலில் இருக்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.





