இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி

இலங்கை–ஜேர்மனி இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க கடன் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து

இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு செயன்முறையில் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக, ஜேர்மனிய

கூட்டாட்சி குடியரசுடன் இன்று புதிய இருதரப்பு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது.

நிதி அமைச்சில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் 188 மில்லியன் யூரோ பெறுமதியான கடனை மறுசீரமைப்பதற்கான ஆவணங்களில் இலங்கை அரசின் சார்பில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும மற்றும் ஜேர்மனி சார்பில் சாரா ஹெசல்பாத் (Sarah Hasselbarth) ஆகியோர் கையெழுத்திட்டனர்.

உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனான (OCC) இணக்கப்பாட்டைத் தொடர்ந்து எட்டப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இலங்கையின் கடன் நிலைத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் பெரும் உதவியாக அமையும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் இக்கட்டான காலப்பகுதியில் ஜேர்மனி வழங்கி வரும் இந்தத் தொடர்ச்சியான ஆதரவு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!