அரசியல் இலங்கை செய்தி

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை

பேரிடர் முகாமைத்துவத்திற்கான சிறப்பு தேசிய சபைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.

பிரதம அமைச்சர் இணைத்தலைமை வகிப்பார்

2004 ஆம் ஆண்டு சுனாமியைத் தொடர்ந்து, 2005 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க பேரிடர் முகாமைத்துவ சட்டத்தின் கீழ் இந்த சபை நிறுவப்பட்டது.

எனினும், அச்சபையின் செயல்பாடு இயங்கா நிலையிலேயே இருந்து வந்தது.

எனவே , மேற்படி சட்டத்தில் சில திருத்தங்கள் தேவை என்றும், இது சபைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

தேசிய அனர்த்த முகாமைத்துவ சபையின் சிறப்பு கூட்டம் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, நாடாளுமன்றம் எதிர்வரும் 18 ஆம் திகதி கூடவுள்ளது.

இதன்போது டித்வா புயல் தொடர்பான நிவாரணப் பணிகளுக்குத் தேவையான அவசர நிதிக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளது.

ஆயிரம் பில்லியன் ரூபாகோரும் குறைநிரப்பு பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. இதற்கு எதிரணி முழு ஒத்துழைப்பை வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Sanath

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!