இலங்கைக்கு 80 டன் மனிதாபிமான உதவிகளை அனுப்பிய பாகிஸ்தான்
டித்வா(Ditwa) சூறாவளியால் ஏற்பட்ட சமீபத்திய இயற்கை பேரிடரைத் தொடர்ந்து, இலங்கையின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து பாகிஸ்தான்(Pakistan) 80 டன் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.
இலங்கையின் தேசிய விமான நிறுவனத்தால் லாகூர்(Lahore) மற்றும் கொழும்பு(Colombo) இடையே இயக்கப்படும் நான்கு தனித்தனி விமானங்களில் நிவாரணப் பொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கை நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கை குழுக்களுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில், உதவிப் பொதியை வழங்குவதற்கும், தகுதியானவர்களுக்கு சரியான நேரத்தில் வழங்குவதற்கும் உதவுகிறது என்று பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில், பாகிஸ்தானின் புகழ்பெற்ற அரசு சாரா அமைப்பான (NGO), அல் கித்மத்(Al Khidmat) அறக்கட்டளை, இந்த சவாலான காலகட்டத்தில் இலங்கையர்களை ஆதரிப்பதற்கான நிவாரண முயற்சிகளில் கூட்டு சேர்ந்துள்ளது.




