இலங்கை

இலங்கையில் உறங்கிக் கொண்டிருந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் கணவர்

அநுராதபுரம் – கெக்கிராவ – செக்குபிட்டிய பகுதியில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கூரிய ஆயுதத்தால் தாக்கி அவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தனது கணவர், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்த 35 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தனது மனைவியை யாரோ கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக அவரது கணவர் நேற்று அதிகாலை கெக்கிராவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் மனைவி வேறு அறையில் தூங்கிக்கொண்டிருந்ததாக கணவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.

சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!