இங்கிலாந்தில் அறுவை சிகிச்சையின் போது செவிலியருடன் உடலுறவு கொண்ட பாகிஸ்தான் மருத்துவர்

பாகிஸ்தானிய வம்சாவளியைச் சேர்ந்த மூத்த மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சையின் நடுவில் ஒரு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபடுவதற்காக ஒரு நோயாளியை விட்டுச் சென்றதாக இங்கிலாந்து மருத்துவ தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய விசாரணையின் போது, மருத்துவர் சுஹைல் அஞ்சும், 2023ம் ஆண்டு நோயாளியை விட்டு வெளியேறி ஒரு செவிலியருடன் பாலியல் செயலில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
செப்டம்பர் 16, 2023 அன்று கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள டேம்சைட் பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கில் ஒரு செவிலியருடன் ஆலோசகர் மயக்க மருந்து நிபுணரான அஞ்சும் உடலுறவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மான்செஸ்டரில் உள்ள தீர்ப்பாயத்திடம், பித்தப்பை அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நோயாளியை அஞ்சும் விட்டுச் சென்றதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 2 times, 2 visits today)