இலங்கையில் வீடொன்றில் இடம்பெற்ற தீ விபத்து – ஒருவர் பலி

குருநாகல் பொலிஸ் பிரிவின் வில்பாவ பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிறுவனத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக தங்குமிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருநாகல் பொலிஸாருக்கு கிடைத்த செய்தியின் அடிப்படையில் விசாரணைகளைத் தொடங்கியபோது, நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.
உயிரிழந்தவர் வத்தேகம பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர்.
சம்பவம் குறித்து குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 1 times, 1 visits today)