ஆஸ்திரேலியா

இரண்டு வயது குழந்தையை சூட்கேசுக்குள் வைத்து பயணம் செய்த நியூசிலாந்து பெண் கைது

இரண்டு வயதுப் பெண் பிள்ளையைப் பயணப் பெட்டிக்குள் வைத்து பேருந்துப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து பெண் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 3) கைது செய்யப்பட்டார்.

பிள்ளையைக் கொடுமைப்படுத்தியது தொடர்பில் அந்தப் பெண்மீது குற்றம் சாட்டப்பட்டதாக அந்நாட்டுக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

பேருந்து நின்றபோது அந்தப் பயணப்பெட்டி சந்தேகத்தைத் தூண்டும்விதமாக அசைந்துகொண்டிருந்ததை பேருந்து ஓட்டுநர் கண்டார்.

அதனையடுத்து, ஆக்லாந்து நகரின் 100 கிலோமீட்டர் வடக்கிலுள்ள கைவாக்கா பேருந்து முனையத்திற்குக் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டனர்.

பயணப்பெட்டியைத் திறந்து பார்த்தபோது அதனுள் இரண்டு வயதுச் சிறுமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சிறுமியின் உடல் சூடாக இருந்ததைத் தவிர அவருக்கு ஒன்றும் ஆகவில்லை எனத் தோன்றுவதாக அதிகாரிகள் கூறினர். தற்போது அந்தச் சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் 27 வயதுப் பெண் கைது செய்யப்பட்டார்.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆஸ்திரேலியா செய்தி

ஆர்ப்பாட்டகாரர்களால் முற்றுகையிடப்பட்ட அவுஸ்திரேலிய நாடாளுமன்றம்!

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் குடியேற்றவாசிகள் குறித்த கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்தின் முன்னால் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பாதுகாப்பு மற்றும் செவ்விசாவைவைத்திருக்கும் 19000
ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலிய தேர்தலில் களமிறங்கிய இலங்கை தமிழ் இளைஞன்

மே 27 நடைபெற உள்ள அவுஸ்திரேலியாவின் பெடரல் தேர்தலில் தமிழர்களும் களம்பிறக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில் கிரீன் கட்சி சார்பாக செல்வன் சுஜன் அவர்கள் களமிறங்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் மனித
error: Content is protected !!