ஆசியா

தன் மீதான அரசியல் குற்றச்சாட்டை நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள பிலிப்பீன்ஸ் திணை அதிபர்

பிலிப்பீன்ஸ் நாட்டின் துணை அதிபர் சாரா டுட்டர்டே தம் மீதான அரசியல் குற்றச்சாட்டை நீக்க வேண்டும் என்று மீண்டும் குரல் கொடுத்துள்ளார்.

தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகுறித்து செனட் சபைக்குப் பதிலளித்தபோது டுட்டர்டே ‘இது ஒரு வெற்று காகிதம்’ என்று வருணித்தார்.இந்தப் புகார் அர்த்தமில்லாதது, ஆதாரமற்றது, உடனடியாக விசாரணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரினார். செனட் சபைக்கு 34 பக்கங்களில் டுட்டர்டே விளக்கமளித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் பிலிப்பீன்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துணை அதிபர் டுட்டர்டேமீது விசாரணை நடத்த வேண்டும் என்று வாக்களித்தனர்.பொதுச் சேவையில் இருக்கும்போது ஊழல், குற்றச் செயல்களில் ஈடுபட்டது எனக் குற்றஞ்சாட்டப்பட்டு டுட்டர்டேமீது விசாரணை தொடங்கியது.மேலும் டுட்டர்டே தற்போதைய அதிபரைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அரசியல் குற்றச்சாட்டிலிருந்து டுட்டர்டே விடுவிக்கப்பட்டால் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் கடும் போட்டி கொடுக்கக்கூடும். டூட்டார்டே முன்னாள் அதிபர் ராட்ரிகோ டுட்டர்டேவின் மகள் ஆவர்.2028ஆம் ஆண்டு பிலிப்பீன்சில் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. அதில் டுட்டர்டே போட்டிப்போட விரும்புகிறார்.

தற்போது அதிபராக உள்ள பெர்டினான்ட் மார்கோஸ் ஜூனியர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. அடுத்த அதிபரை அடையாளம் காண்பதில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

துணை அதிபருக்கும் அதிபருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் பிலிப்பீன்ஸ் அரசியல் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துணை அதிபர் டுட்டர்டே மீதான வழக்கிலிருந்து அதிபர் மார்கோஸ் சற்று விலகித்தான் உள்ளார்.டுட்டர்டேமீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் அரசியலில் ஈடுபட வாழ்நாள் தடை விதிக்கப்படும்.

(Visited 2 times, 2 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
Skip to content