இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

இலங்கையர்கள் தங்கள் பாதுகாப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார எச்சரித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஈரானால் தாக்குதல்கள் அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொதுக்கூட்டங்களை நடத்த வேண்டாம் என்ற அறிவிப்புக்கு இணங்க, பொசன் பூரணை பண்டிகையையொட்டி டெல் அவிவில் நடைபெறவிருந்த தானசாலைகள் மற்றும் தொண்டு நிகழ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தனது முகநூல் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
பாதுகாப்பான வீடுகள் இல்லாத இடங்களில் வசிக்கும் இலங்கையர்களுடன் இஸ்ரேல் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயற்படுவதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 4 times, 4 visits today)