கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபருக்கு நேர்ந்த கதி

கென்யாவில் அரசியல் மற்றும் சமூக பிரச்சனைகளை எழுப்பிய யூடியூபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
யூடியூபரான 31 வயதான ஆல்பர்ட் ஓஜ்வாங், காவல்துறை கஸ்டடியில் உயிரிழந்ததாக கூறி போராட்டங்கள் வெடித்தன.
நைரோபியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைத்தனர். காவல்துறை அதிகாரியை விமர்சனம் செய்து வீடியோ பதிவிட்டதாக ஆல்பர்ட் ஓஜ்வாங் கைது செய்யப்பட்டார்.
சிறை கம்பியில் தலையை மோதிக்கொண்டதே அவரது உயிரிழப்புக்கு காரணம் என்ற போலீசாரின் விளக்கத்தை ஏற்க ஓஜ்வாங் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர்.
(Visited 4 times, 1 visits today)