இலங்கை – வரலாற்றில் இரண்டாவது நாளாகவும் உச்சத்தை தொட்ட பங்குச் சந்தை : மகிழ்சியில் நிறுவனங்கள்‘!

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் குறியீடும் இன்று (04) இரண்டாவது நாளாகவும் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்தது.
அதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில் அனைத்து பங்கு விலைக் குறியீடும் 138.66 புள்ளிகள் அதிகரித்து 17,353.05 புள்ளிகளாக உயர்ந்து, நேற்று (03) பதிவான அனைத்து நேர உயர்வான 17,214.39 புள்ளிகளைத் தாண்டியது.
சிலோன் டொபாகோ நிறுவனம், சென்ட்ரல் ஃபைனான்ஸ் நிறுவனம், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ், லயன் ப்ரூவரி சிலோன் மற்றும் கார்கில்ஸ் சிலோன் ஆகியவற்றின் பங்கு விலைகளில் ஏற்பட்ட அதிகரிப்பு இன்று அனைத்து பங்கு விலைக் குறியீட்டின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
இதற்கிடையில், நாள் வர்த்தகத்தின் முடிவில் S&P SL20 விலைக் குறியீடு 28.38 புள்ளிகள் அதிகரித்து 5,159.66 புள்ளிகளாக இருந்தது. இன்று ரூ. 7.37 பில்லியன் பரிவர்த்தனை வருவாய் பதிவாகியுள்ளது.