கலிபோர்னியா காட்டுத்தீ – பலி எண்ணிக்கை உயர்வு : எச்சங்களை மீட்க போராடும் அதிகாரிகள்!
 
																																		கலிபோர்னியா காட்டுத்தீயில் இறந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவசர சேவைகள் மனித எச்சங்களைக் கண்டுபிடிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி மருத்துவ பரிசோதகர் அலுவலகம் வார இறுதியில் காட்டுத்தீயில் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு டசனுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக உறுதிப்படுத்தியது.
மனித எச்சங்களை அடையாளம் காண குறிப்பாக பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தீ விபத்துக்குப் பிறகு காணாமல் போனவர்கள் யாரேனும் இருந்தால், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகளைச் செயல்படுத்த நிறுவப்பட்ட மையத்திற்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
