பொழுதுபோக்கு

அப்படி நடக்கும்னு நினைச்சா, இப்படி நடக்குது… தப்பு கணக்கு போட்ட ரசகுல்லா நடிகை

வாய்ப்பு வராதா என பல நடிகைகள் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதற்காக சில பல வேலைகளையும் பார்த்து வருகின்றனர். ஆனால் வந்த வாய்ப்பை பார்த்து கடுப்பில் இருக்கிறார் ஒரு நடிகை.

ரசகுல்லா போல் இருக்கும் இந்த நடிகை ஆரம்பத்தில் கவனம் பெறவில்லை என்றாலும் தற்போது பாலிவுட் வரை பிரபலமாகி இருக்கிறார். ஒரு காலத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்த இவருக்கு இடையில் வாய்ப்பு வராமல் இருந்தது.

அதை அடுத்து படங்களில் நிறைய தாராளம் காட்ட ஆரம்பித்தார். அதன் பலனாக பெரிய ஹீரோ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதுவே அவருக்கு பெரிய ரீ என்ட்ரியாகவும் இருந்தது.

அதேபோல் சில படங்களில் நடிக்க தொடங்கிய இவர் சம்பளத்தையும் உயர்த்தினார். அது மட்டும் இன்றி நட்பு வட்டாரத்தில் ஒரு பாடலுக்கு ஆட கேட்டதில் மறுக்க முடியாமல் சம்மதித்தார். அந்த பாடலும் ஹிட் அடித்தது.

ஆனால் இப்போது நடிகைக்கு வாய்ப்புகள் குறைந்த நிலையில் ஐட்டம் பாடலுக்கு ஆட சொல்லி தயாரிப்பாளர்கள் கேட்கிறார்களாம். நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற கதையாக நடிகை இப்போது அப்செட்டில் இருக்கிறார்.

பெரிய ஹீரோ படத்தில் நடித்தால் இன்னொரு ரவுண்டு வரலாம் என்று தான் நடிகை அதற்கு ஒப்புக்கொண்டார். ஆனால் இப்போது அதே பாணியில் வாய்ப்பு வருவதால் நடிகை மன அமைதிக்காக ஆன்மீகம் பக்கம் திரும்பியுள்ளார்.

 

(Visited 4 times, 1 visits today)

MP

About Author

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்