ட்ரம்பின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உக்ரைனில் அதிகரிக்கும் பதற்றம்!
டொனால்ட் டிரம்பின் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரேனிய நகரங்களில் அதன் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களின் தீவிரம் ஒரே வாரத்தில் 44 சதவீதம் அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி 2022 இல் முழு அளவிலான போர் தொடங்கியதில் இருந்து ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின் ட்ரோன் தாக்குதல்களின் அளவும் சிக்கலான தன்மையும் படிப்படியாக அதிகரித்து வருகின்றன.
கடந்த ஐந்து வாரங்களில் சுமார் 4,500 UAVகள் பகிரப்பட்ட எல்லையை இரு திசைகளிலும் கடந்து சென்றுள்ளன.
ட்ரம்பின் தேர்தல் வெற்றியை தொடர்ந்து உக்ரேனிய இலக்குகள் மீது குண்டுவீசுவதற்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட் ஸ்டிரைக் ட்ரோன்களை மாஸ்கோ பயன்படுத்தியதில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
(Visited 30 times, 1 visits today)





