இலங்கையில் இடம்பெற்ற கோர விபத்து – 18 பேர் வைத்தியசாலையில்!

கண்டி – கொழும்பு பிரதான வீதியில் உடுவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை தனியார் பஸ்ஸும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக அவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 134 times, 1 visits today)