இலங்கை

இலங்கையில் ஜனாதிபதியின் புகைப்படங்களை வெளியிட கட்டுப்பாடு

இலங்கையில் நிகழ்வுகளின் பெயர்ப் பலகைகள் மற்றும் விசேட நினைவு சஞ்சிகைகளுக்கு ஜனாதிபதியின் படங்கள் மற்றும் வாழ்த்துச் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அனுமதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தின் எழுத்துமூல அனுமதியை முன்கூட்டியே பெற வேண்டியது அவசியமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரச நிதியைப் பெற்று முன்னெடுக்கப்படும் பணிகளை ஏற்பாடு செய்யும் போது, அரசாங்கத்தின் கொள்கை மற்றும் தொலைநோக்குப் பார்வைக்கு அமைவாகச் செயற்படுவது அவசியமானது எனவும் அரச நிறுவனங்களை அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனச் சபைகள் உள்ளிட்ட சட்டப்பூர்வ நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களின் தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலாளர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.

(Visited 7 times, 7 visits today)
See also  ஸ்திரத்தன்மை அடைந்துள்ள இலங்கை பொருளாதாரம் - உலக வங்கி பாராட்டு!
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்

You cannot copy content of this page

Skip to content