ஆசியா

இந்தோனேசியாவில் குழந்தையை இணையத்தில் விற்பனை செய்த தந்தை!

இந்தோனேசியாவில் குழந்தையை இணையத்தில் விற்பனை செய்த சந்தேகத்தில் நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேற்கு ஜக்கர்த்தாவில் உள்ள Tangerang எனும் பகுதியில் அந்த 36 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். RA என்று அதிகாரிகளால் தந்தை அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் 11 மாத குழந்தையை விற்ற பணத்தைத் தம்முடைய சொந்தத் தேவைகளுக்கும் சூதாட்டத்திற்கும் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

குழந்தையை வாங்கியவர்கள் ஆட்கடத்தல் கும்பல்களோடு சம்பந்தப்பட்டிருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அந்தச் சம்பவம் இம்மாதம் முதலாம் திகதி தெரியவந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அன்று குழந்தையின் தாயார் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியவுடன் குழந்தையைத் தேடியிருக்கிறார்.

குழந்தையைக் காணவில்லை என்று தெரிந்தவுடன் RA-யிடம் அவர் பலமுறை கேட்டார். பிறகு RA குழந்தையை விற்றுவிட்டதை ஒப்புக்கொண்டார்.

அந்தப் பெண் பிறகு RA-யை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

(Visited 7 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!