மத்திய கிழக்கு

நஸ்ரல்லாவின் இடத்தை நிரப்பவிருந்ததாக நம்பப்படுபவரைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்

லெபனான் தலைநகர் பெய்ருட்டுக்கு அருகே உள்ள நிலத்தடி பாதுகாப்பிடத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) காலை பெரிய அளவில் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தியது.

அண்மையில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசான் நஸ்ரல்லாவின் உறவினரும் அவரின் இடத்தை நிரப்பவிருந்ததாக நம்பப்படுபவருமான ஹா‌ஷெம் சஃபீதினைக் குறிவைக்கும் நோக்கில் அந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்று இஸ்ரேலிய அதிகாரிகள் மூவர் தெரிவித்தனர்.

பெய்ருட்டுக்கு அருகே மூத்த ஹிஸ்புல்லா தலைவர்கள் பங்கேற்ற சந்திப்பைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் தங்களின் அடையாளத்தை வெளியிட விரும்பவில்லை.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் காஸா போர் தொடங்கியதிலிருந்து பெய்ருட்டுக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதல், அவ்வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆக மோசமான தாக்குதல்களில் ஒன்றாகும். லெபனான் அரசாங்கத்துக்குச் சொந்தமான செய்தி அமைப்பு அத்தகவலை வெளியிட்டது.

Killing Nasrallah - Tablet Magazine

பெய்ருட்டுக்குத் தெற்கே உள்ள, மக்கள்தொகை அதிகமாக இருக்கும் தாஹியா என்ற பகுதியில் பல வெடிப்புகள் இடம்பெற்றன. அப்பகுதி, ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதியாகும்.அங்கு நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக பெய்ருட்டில் கட்டடங்கள் குலுங்கின. அதோடு, சம்பவம் நடந்த இடத்திலிருந்து 24 கிலோமீட்டர் தொலைவில் இருந்த மக்களாலும் வெடிப்புச் சத்தத்தைக் கேட்க முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.சஃபீதின் உள்ளிட்ட ஹிஸ்புல்லா தலைவர்களின் நிலை உடனடியாகத் தெரியவில்லை.

தென் லெபனானில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட நகரங்கள், கிராமங்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறுமாறு வியாழக்கிழமையன்று (அக்டோபர் 3) இஸ்ரேல் அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதற்கு சில மணிநேரம் கழித்து தாஹியாவில் தாக்குதல் நடத்தப்பட்டது.அது, ஹிஸ்புல்லா மீதான தாக்குதல்களை இஸ்ரேல் விரிவுபடுத்துவதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

போர், மத்திய கிழக்கில் மேலும் சில இடங்களுக்குப் பரவக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஹமாஸ், ஹிஸ்புல்லா அமைப்புகளுக்கு ஆதரவளிக்கும் ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து ஆலோசித்து வருவதால் அந்தக் கவலை எழுந்துள்ளது.

நஸ்ரல்லா, ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானியத் தளபதி ஒருவர் ஆகியோர் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக ஈரான் இந்த வாரம் இஸ்ரேல் மீது சுமார் 200 ஏவுகணைகளைப் பாய்ச்சியது. அதனையடுத்து ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

(Visited 17 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

மத்திய கிழக்கு

ஆர்மீனியாவிற்கும், அஸர்பைஜானுக்கும் இடையில் பதற்றம்!

  • April 24, 2023
ஆர்மீனியாவுக்குச் செல்லும் முக்கிய வீதியொன்றில் அஸர்பைஜான் படையினர் சோதனை நிலையமொன்றை அமைத்ததால் இரு நாடுகளுக்கும் இடையில பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இவ்விரு நாடுகளும் 1990 களிலும் 2020 ஆம்
ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு

சூடான் மோதல் குறித்து கோப்ரா கூட்டம் இன்று!

  • April 24, 2023
சூடானில் ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக மற்றொரு கோப்ரா கூட்டம் இன்று நடைபெறும் என டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. இன்றைய அமர்விற்கு யார் தலைமை தாங்குவார்கள் என்பது தெரியவில்லை.