இலங்கையில் புதிய அமைச்சுகளின் கீழ் உள்ள நிறுவனங்கள் பற்றிய விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!

புதிய அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்களின் பிரிவு மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 44(1) சரத்தின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின் பிரகாரம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இந்த வர்த்தமானியை வெளியிட்டார்.
புதிய அரசாங்கத்தின் குறுகிய கால அமைச்சரவை அண்மையில் நியமிக்கப்பட்டது.
(Visited 11 times, 1 visits today)