இலங்கை செய்தி

அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படுவோம் – பைடனிடம் கூறிய அநுர

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரகுமார திஸாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதழபதி தனது X கணக்கில் ஒரு குறிப்பை வைத்து இந்த வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.

அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது,

“இலங்கை மக்கள் உங்களை ஒரு சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தலில் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் அதில் பெருமைப்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்புக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்நோக்குகிறேன்” என ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியின் பதிவிற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, எனது தலைமையில் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார்.

‘X’ தளத்தில் ஜோ பைடனின் வாழ்த்து செய்திக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா உடனான நீண்டகால நட்பை பலப்படுத்தும் விதமாக செயற்பட உள்ளதாக அநுர உறுதியளித்துள்ளார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!