இலங்கை

இலங்கை: தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தாள் கசிவு? வெளியான தகவல்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்தமை தொடர்பில் பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செப்டம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை பரீட்சை ஆரம்பமாவதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னர் பரீட்சை கடமையில் இருந்த ஆசிரியர் ஒருவர் முதல் வினாத்தாளை புகைப்படம் எடுத்ததாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த படங்கள் பின்னர் பல ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன்படி, அனுராதபுரம் மற்றும் நொச்சியாகம பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள், அவர்களது கைத்தொலைபேசியுடன் விசாரணைக்காக பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தேர்வுக்கு முன்னதாக சமூக வலைதளங்களில் தேர்வுத் தாள் கசிந்ததா என்பது குறித்து மற்றொரு விசாரணை நடந்து வருகிறது.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளில் உள்ளதைப் போன்று நேற்று கலந்துரையாடலுக்காக பகிரப்பட்ட 3 வினாக்கள் தொடர்பான விசாரணைகள் நாளை நடைபெறவுள்ளதாகவும், அவை கசிந்திருந்தால் இந்த வினாக்கள் தாள் குறியிடலின் போது புறக்கணிக்கப்படும் எனவும் பரீட்சைகள் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

(Visited 81 times, 1 visits today)

TJenitha

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
Skip to content