இலங்கை

இலங்கை ஜனாதிபதி தேர்தல் – வட மாகாண இளைஞர்களுக்கு நாமலின் வாக்குறுதி

எதிர்வரும் ஐந்து வருடங்களில் வடக்கு மாகாணத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்களுக்குத் தொழில் வாய்ப்புகள் பெற்றுத்தரப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாணம் முக்கிய கேந்திர நிலையமாக மாற்றப்படும். பல வருடங்களாக அரசியல் இலாபத்துக்காக வடக்கு மாகாணம் ஒடுக்கப்பட்டிருந்தது.

வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இளைஞர்கள் கல்வி கற்பதன் மூலம் அதன் அபிவிருத்திக்குப் பங்களிக்க முடியும்.

யாழ்ப்பாண முதலீட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ளும் வகையில் சர்வதேச விமான நிலையம் வர்த்தக மையமாக மாற்றப்படும்.

வடக்கில் உற்பத்தி செய்யப்படும் இலங்கையின் உள்ளூர் தயாரிப்புகள் உலக சந்தையில் ஊக்குவிக்கப்படும்.

இவ்வாறான செயற்பாடுகள்மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகமான தொழில்முனைவோர்களை உருவாக்க முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

(Visited 36 times, 1 visits today)

SR

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!