ஆசியா

வங்கதேசத்தில் அரசு எதிரான கிளர்ச்சியின் பின்னணியில் இருக்கும் அமெரிக்கா : எழுந்துள்ள குற்றச்சாட்டு!

வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, எதிர்ப்புகளை எதிர்கொண்டு ராஜினாமா செய்துள்ள நிலையில், தன்னை ஆட்சியில் இருந்து வெளியேற்றும் சதியின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக கூறுகிறார்.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த செயின்ட் மார்ட்டின் தீவுகளின் மீது இறையாண்மையை வழங்கியிருந்தால், அது பதவியில் இருக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஷில் மாணவர்கள் நடத்திய போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பிச் சென்ற பிறகு முதல் முறையாக அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், நாட்டில் வன்முறைகள் மேலும் வளர்ச்சியடைவதைத் தடுப்பதற்காகவே தனது ராஜினாமா என்று குறிப்பிட்டுள்ள ஷேக் ஹசீனா, தீவிரவாதிகளிடம் விழ வேண்டாம் என்று பங்களாதேஷ் மக்களைக் கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

VD

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்
error: Content is protected !!