ஆசியா

தென்கொரிய அதிபர் மாளிகை வளாகத்தை அலங்கோலப்படுத்திய வடகொரியாவின் குப்பைப் பலூன்கள்

வடகொரியா அனுப்பிய ‘குப்பைப் பலூன்கள்’ தென்கொரிய அதிபர் மாளிகையில் குப்பைகளைச் சிதறடித்துள்ளன.இந்தச் சம்பவம் ஜூலை 24ஆம் திகதியன்று நிகழ்ந்தது.

இதையடுத்து, அந்தக் குப்பைகளில் ஏதேனும் ரசாயனம் அல்லது கதிர்வீச்சு உள்ளனவா என்பதை சோதனையிட தென்கொரியா சிறப்புக் குழு ஒன்றை அங்கு உடனடியாக அனுப்பி வைத்தது.

தென்கொரிய அதிபர் மாளிகையை அசுத்தப்படுத்திய குப்பைகளை அக்குழுவினர் எடுத்துச் சென்றுவிட்டதாக தென்கொரிய அதிபர் மாளிகையின் பாதுகாப்புப் பிரிவு தெரிவித்தது.

விசாரணைக்குப் பிறகு, அந்தக் குப்பைகளால் எவ்வித ஆபத்தும் இல்லை என்று தென்கொரிய அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

கடந்த மே மாதத்திலிருந்து தென்கொரியாவை நோக்கி ‘குப்பைப் பலூன்களை’ வடகொரியா பறக்கவிட்டு வருகிறது.ஆனால் அதிகமாகப் பாதுகாக்கப்படும் தென்கொரிய அதிபர் மாளிகையின் வளாகத்துக்குள் வடகொரியா அனுப்பிய ‘குப்பைப் பலூன்கள்’ விழுந்திருப்பது இதுவே முதல்முறை.

தென்கொரிய அதிபர் மாளிகைக்கு மேல், சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறப்பதற்கு அனுமதி இல்லை.அப்படியிருக்க இந்தக் ‘குப்பைப் பலூன்கள்’ அவ்விடத்துக்குள் எப்படி நுழைந்தன என்ற கேள்வி எழுந்துள்ளது.

(Visited 11 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்