அறிவியல் & தொழில்நுட்பம்

டைப்-சி சார்ஜர் பயன்படுத்துபவரா நீங்கள்? அவதானம்

டைப்-சி சார்ஜிங் போர்ட் பரவலாக பயன்படுத்தப்படும் நிலையில், அவற்றை பயன்படுத்தும் போது செய்யும் சில தவறுகள் உங்கள் ஸ்மார்ட்போனை சேதப்படுத்தலாம். எனவே சில தவறுகளை செய்யாமல் கவனமாக இருப்பது முக்கியம்.

டைப்-சி சார்ஜிங் போர்ட் பயன்படுத்துவதால் பல நன்மைகள் உள்ளது. இதனால் தான் டைப்-சி சார்ஜிங் போர்ட்டை மத்திய அரசு கட்டாயமாக்க திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் அதைப் பயன்படுத்தும் போது சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மொபைல் பயனர்கள் தங்கள் சார்ஜர் அடாப்டர் மூலம் எத்தனை வாட்ஸ் சார்ஜ் ஆகும் என்பதை அறிந்திருக்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு ஏற்ற சார்ஜிங் அடாப்டரை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்ய வேண்டும்.

சந்தையில் இரண்டு வகையான டைப்-சி சார்ஜிங் கேபிள்கள் உள்ளன. ஒன்று USB Type-C to Type-C சார்ஜிங் கேபிள். மற்றொன்று USB Type-A முதல் USB Type C கேபிள். இந்த இரண்டு வகை கேபிள்களின் சார்ஜிங் பொறிமுறையும் வேறுபட்டதாக இருக்கும்.

See also  அதிகாலை 05 மணிக்கு பிறகு வானில் தோன்றும் வால் நட்சத்திரம் : 80000 வருடங்களுக்கு பிறகு காணக்கிடைக்கும் அரிய வாய்ப்பு!

பெரும்பாலான பயனர்கள் சார்ஜ் செய்யும் போது டைப்-சி சார்ஜிங் கேபிள் வகைகள் குறித்து கவனம் செலுத்துவதில்லை, இதன் காரணமாக ஸ்மார்ட்போன் சேதமடையக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்

சந்தையில் பாஸ்ட் சார்ஜர்கள் டைப்-சி சார்ஜிங் போர்ட்டுடன் வருகின்றன. டைப்-சி சார்ஜிங் போர்ட் கொண்ட அடாப்டர்கள் வெவ்வேறு வாட் பவர் அவுட்புட்டைக் கொண்டுள்ளன. சில சார்ஜர்கள் 44W, 65W, என்ற பவர் அவுட் புட்டையும் சில சார்ஜிங் அடாப்டர்கள் 100W மற்றும் 120W என்ற பவர் அவுட் புட்டையும். தவறான அடாப்டரை பயன்படுத்தினால், போன் சேதமடையும்.

டைப் சி சார்ஜரை சுத்தம் செய்வதில் சிக்கல் உள்ளது. அதாவது எளிதில் சுத்தம் செய்ய முடியாது. அத்தகைய சூழ்நிலையில், அதில் அழுக்கு எளிதாக நிரம்பி விடும். இதன் காரணமாக சில நேரங்களில் சார்ஜ் செய்வதில் சிக்கல் ஏற்படும்.

ரயில் நிலையம் அல்லது பொது இடங்களில் உள்ள வசதிகளை பயன்படுத்தி மொபைலை சார்ஜ் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உங்களுக்கான சொந்த சார்ஜரை உங்களுடன் எடுத்துச் செல்வது நல்லது. மேலும் பொது இடங்களில் சார்ஜிங்கை பயன்படுத்துவது பாதுகாப்பும் இல்லை.

(Visited 8 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்

You cannot copy content of this page

Skip to content