ஆசியா செய்தி

சிங்கப்பூரில் பறவைக் காய்ச்சல் அச்சம் – பறவைகள் தொடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

சிங்கப்பூரர்கள் பறவைக் காய்ச்சல் குறித்து அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பறவைகளைத் தொடுவதையோ, அவற்றுக்கு உணவளிப்பதையோ தவிர்க்கும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

H5N1 பறவைக்காய்ச்சல் இங்குப் பரவாமல் தடுக்க அந்த ஆலோசனை தரப்படுகிறது. இதுவரை இங்கு யாருக்கும் அந்த நோய் பரவியதாகத் தகவல் இல்லை. ஆயினும் கவனமாக இருப்பது முக்கியம் என்று அதிகாரிகள் கூறினர்.

ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்குப் பரவியிருக்கிறது.

விலங்குநல மருத்துவச் சேவையும், சிங்கப்பூர் உணவு அமைப்பும் இந்த வட்டாரத்தில் பறவைக் காய்ச்சல் நிரந்தர நோயாக இருப்பதாகத் தெரிவித்தன.

(Visited 28 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!