ஐரோப்பா

மத்திய லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் குடியிருப்பு தொகுதியில் தீவிபத்து!

மத்திய லண்டனில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு தொகுதியில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

லண்டனின் ஸ்பிடல்ஃபீல்ட்ஸில் உள்ள 22 மாடி குடியிருப்புத் தொகுதியின் மூன்றாவது மாடியில் இந்த தீவிபத்து பதிவாகியுள்ளது.

சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் மற்றும் எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நிலையில், தீயணைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒரு பெண் மூச்சுத்திணறல் கருவியை அணிந்த நிலையில், தீயணைப்பு வீரர்களால் ஆம்புலன்ஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

தற்போது தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக லண்டன் தீயணைப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்