இலங்கையில் குளவி கொட்டுக்கு இலக்கான 35 மாணவர்கள் உட்பட ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

கெகிராவ பகுதியில் குளவி தாக்கியதில் குறைந்தது 35 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இஹல ககாமே ஆரம்ப பாடசாலையைச் சேர்ந்த ஐந்து முதல் பத்து வயதுக்குட்பட்ட சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுளளது.
குழந்தைகளுக்கு உதவ விரைந்த ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களும் குளவிகளின் திரளால் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் கெக்கிராவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆபத்தான நிலையில் இருந்த ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 10 times, 1 visits today)