சிங்கப்பூரில் பெண் குழந்தைக்கு தாய் செய்த மோசமான செயல்!

சிங்கப்பூரில் பெண் குழந்தையை கொடுமைப்படுத்தியதாக தாய் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குழந்தையின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
குழந்தைக்கு 2 மாதமும் 5 மாதமும் இருந்தபோது அந்த 34 வயதுப் பெண் அவ்வாறு செய்ததாக நம்பப்படுகிறது.
அந்தச் சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதமும் இந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் நடந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான அவர் மீது குழந்தையை மோசமாக நடத்திய குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு அதிகபட்சம் 8 ஆண்டுச் சிறைத்தண்டனை அல்லது 8,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
வழக்கு விசாரணை அடுத்த மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)