இலங்கை செய்தி

பாடசலை மாணவர்களால் தாக்கப்பட்டு இறந்தவரின் உடல் ரகசியமாக தோண்டியெடுப்பு

வெலிப்பன்ன, கல்மட்ட பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மூவரினால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஒரு பிள்ளையின் தந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கணவரின் உடல் பாகங்கள் தோண்டி எடுக்கப்பட்டதாக உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

பெப்ரவரி 14, 2023 அன்று, கல்மட்ட பிரதேசத்தில் மூன்று பாடசாலை மாணவர்களுடன் ஏற்பட்ட தகராறில் 35 வயதான டொன் ரங்க விராஜ் ஜயசிங்க என்ற ஒரு பிள்ளையின் தந்தை கொல்லப்பட்டார்.

அவரது மனைவி மற்றும் உறவினர்கள் நினைவுச் சடங்குகள் மற்றும் பிற நாட்களில் கல்லறையை சுத்தம் செய்து விளக்குகளை ஏற்றி வருகின்றனர்.  இந்நிலையில், கல்லறைக்கு வந்த போது சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே உயிரிழந்தவரின் மனைவி வெலிப்பன்ன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
Avatar

Jeevan

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content