இந்தியா

தெலுங்கானா – சாலையோரம் நின்ற கன்டெய்னர் லொரிக்குள் புகுந்த கார்- பரிதாபமாக இருவர் உயிரிழப்பு !

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட்டை மாவட்டத்தில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த கன்டெய்னர் லொரிக்கு பின்புறம் கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

தெலுங்கானா மாநிலம், சூர்யாபேட்டை அருகே உள்ள முனகலா மண்டலம், முகுந்தபுரத்தில் இன்று காலை சாலையோரம், ஸ்டேஷனரி பொருட்களை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி நிறுத்தப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு கார் திடீரென லொரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் கார் கன்டெய்னர் லொரியின் பின்பகுதியில் முழுவதுமாக புகுந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்தில் இறந்தவர்களின் பெயர், விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

இதுதொடர்பாக பொலிஸார் கூறுகையில், “கார் ஓட்டுநர் தூங்கிவிட்டதால் இந்த விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். விபத்து தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்றனர்.இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

(Visited 25 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே
error: Content is protected !!