இலங்கையில் மதுபான விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!
எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்கு முன் மதுபானத்தின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
பதுளை பிரதேசத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், மதுபானத்தின் விலையை குறைக்க வேண்டும். பொருட்களின் விலையை குறைக்க வேண்டும். எல்லாவற்றையும் குறைக்க வேண்டும்.
குறிப்பாக மதுபானத்தின் விலையை புத்தாண்டுக்கு முன்னர் குறைக்க எதிர்ப்பார்த்துள்ளோம் என சுட்டிக்காட்டியுள்ளார்.
(Visited 10 times, 1 visits today)





