காசா பகுதியில் பேரழிவு பஞ்சம் ஏற்படும் அபாயம் : உலக வங்கி எச்சரிக்கை
காசா பகுதியில் பேரழிவு பஞ்சம் ஏற்படும் அபாயம் இருப்பதாக உலக வங்கி எச்சரித்துள்ளது.
உதவி நிவாரணத்திற்காக காசாவிற்கு நிபந்தனையற்ற அணுகலை வழங்குமாறு ஐ.நா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் உலக வங்கி தெரிவித்துள்ளது.
உணவுப் பற்றாக்குறை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு பேரழிவு நிலையை நெருங்கி வருவதால், காசா பகுதியின் பாதி மக்கள் பஞ்சத்தின் உடனடி ஆபத்தில் உள்ளனர் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கி கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு, வாஷிங்டனை தளமாகக் கொண்ட வங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்குள் பட்டினியால் ஏற்படும் பரவலான மரணங்களைத் தடுக்க அவசர நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தியுள்ளது.





