தென்கொரிய தேவாலயமொன்றில் 5,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம்
தென்கொரியாவில் உள்ள தேவாலயமொன்றில் 5,000 ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.
தேவாலயத்தின் தோற்றுவிப்பாளர் சன் மியுங் மூன் 2012ஆம் ஆண்டு காலமானார். அதனையடுத்து அவரின் மனைவி திருமணங்களை நடத்திவைத்தார்.
தேவாலயம் 1954ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. உலகம் முழுவதும் அந்தத் தேவாலயத்தைச் சார்ந்தவர்களுக்குத் திருமணங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
நீண்டநாள் கனவு உண்மையாகிய உணர்வைத் திருமண நிகழ்வு தருவதாக மணமுடித்த தம்பதிகளில் சிலர் கூறியுள்ளனர்.
(Visited 14 times, 1 visits today)





