ஐரோப்பா செய்தி

24 மணி நேரத்தில் 40இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரைன் அறிவிப்பு!

கடந்த 24 மணி நேரத்தில் 40க்கும் மேற்பட்ட எதிரி தாக்குதல்களை முறியடித்துள்ளதாக உக்ரேனிய ஆயுதப்படைகளின் பொதுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் 53 ரொக்கெட் தாக்குதல்கள், ஐந்து ஏவுகணைத் தாக்குதல்கள், 18 வான்வழித் தாக்குதல்களை ரஷ்யா மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கு டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள லைமன்,  பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரிங்கா ஆகிய இடங்களில் மொஸ்கோ தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளது. தாக்குதல்களுக்கு ஏற்றபடி உக்ரைனும் பதிலடி கொடுத்து வருகிறது.

இதன்படி  உக்ரேனிய விமானப்படை,  ரஷ்ய துருப்புக்கள் மற்றும் இராணுவ உபகரணங்களின் செறிவு மீது ஆறு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிக்கையொன்று தெரிவித்துள்ளது.

(Visited 2 times, 1 visits today)

hinduja

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி