அறிவியல் & தொழில்நுட்பம்

முதியோர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பிரத்தியேக காலணி!

  • February 18, 2026
  • 0 Comments

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பொறியாளரான டாக்டர் ஜியாங் லி (Jiayang Li), வயதானவர்கள் தங்கள் சமநிலையைப் பராமரிக்கவும், விழுவதைத் தடுக்கவும் உதவும் வகையில் புதிய காலணி ஒன்றை உருவாக்கியுள்ளார். தனது 89 வயதான வழிகாட்டியான பீட்டர் லாங்லோயிஸ் (Peter Langlois) சரியாக நிற்கமுடியாமல் சிரமப்படுவதை அவதானித்ததன் மூலம் இதனை கண்டுப்பிடித்ததாக கூறுகிறார். இது வீழ்ச்சி அபாயங்களை நிவர்த்தி செய்ய உதவுவதாகவும், 253 சிறிய சென்சார்கள் மற்றும் மேம்பட்ட மைக்ரோசிப் பொருத்தப்பட்ட ஒரு இன்சோல் (insole) உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் […]

இலங்கை கல்வி

பங்களாதேஷ் பிரதமருடன் இலங்கை அமைச்சர் சந்திப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

பங்களாதேஷின் பிரதமராக பதவியேற்றுள்ள தாரிக் ரஹ்மானை Tariq Rahman., இலங்கை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Nalinda Jayatissa சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். பிரதமரின் பதவியேற்பு விழா டாக்காவில் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கையின் சார்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பங்கேற்றிருந்தார். இந்நிகழ்வின் பின்னர் பங்களாதேஷின் பிரதமரான தாரிக் ரஹ்மானை சந்தித்த அமைச்சர், இலங்கை அரசாங்கத்தின் சார்பாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை உறுதிப்படுத்திய தலைவர்கள், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் […]

உலகம்

பனியில் புதைந்த 10 பேர் : மீட்பு பணிகளில் சிக்கல்!

  • February 18, 2026
  • 0 Comments

வடக்கு கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி 10 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் நெவாடா கவுண்டி ஷெரிப் ( Nevada County Sheriff’) அலுவலகத்திற்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாகவும், இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுக்கள் அனுப்பப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மாயமானவர்களை கண்டுப்பிடிப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த பகுதியில், சக்திவாய்ந்த குளிர்காலப் புயல் வீசுவதாகவும், இடியுடன் கூடிய மழை மீட்பு நடவடிக்கைகளை தொய்வடைய செய்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]

அரசியல் இலங்கை செய்தி

வங்குரோத்து அரசியல்வாதிகளால் இனவாத ஆயுதம் கையிலெடுப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

“வங்குரோத்தடைந்த அரசியல்வாதிகள் நாட்டில் மீண்டும் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டுவதற்கு முற்படுகின்றனர். இதற்கு ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது.” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் Ramalingam Chandrasekhar தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ இலங்கையில் காலகாலமாக இனவாதப் பிரச்சினைகள் மேலோங்கியே காணப்பட்டன. தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர். எனினும், நாடாளுமன்றத்தில் சலுகைகளைப் பெற்றுக்கொண்டு வாழ்ந்த அரசியல்வாதிகள் இன நல்லிணக்கத்தை மற்றும் மத நல்லிணக்கத்தை […]

இலங்கை

கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நீர் விநியோகம் தடை!

  • February 18, 2026
  • 0 Comments

அம்பத்தலேயில் இருந்து தெஹிவளை வரையிலான பிரதான குழாய்வழியில் இன்று (18) திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக கொழும்பிலும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் (NWSDB) அறிவித்துள்ளது. அதன்படி, மொரட்டுவ, ராவதவத்த, சொய்சாபுர, ரத்மலானை, தெஹிவளை, கல்கிஸ்ஸ, வெள்ளவத்தை, பாமன்கடை, முல்லேரியா மற்றும் கொலன்னாவ ஆகிய இடங்களில் நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதேநேரம், பத்தரமுல்லையில் வசிக்கும் மக்களுக்கு நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் இருக்கும் என்று […]

உலகம்

ட்ரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர வத்திக்கான் மறுப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் “அமைதி வாரியம்” என்ற முன்முயற்சியில் வத்திக்கான் பங்கேற்காது என்று வத்திக்கானின் உயர்மட்ட இராஜதந்திர அதிகாரி கார்டினல் பியட்ரோ பரோலின் ( Pietro Parolin) தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் நெருக்கடி சூழ்நிலைகளைக் கையாள்வதற்கான முயற்சிகளை ஐக்கிய நாடுகள் சபை நிர்வகிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். அமைதி வாரியத்தில் சேர போப் லியோவிற்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை நிராகரித்து கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதேவேளை ஒரு வெளிநாட்டு பிரதேசத்தின் […]

இலங்கை செய்தி

படையினர்மீதான தடை குறித்து பிரிட்டன் துணை பிரதமருடன் பேசப்பட்டதா?

  • February 18, 2026
  • 0 Comments

“ இலங்கை படையினர்மீதான தடைகள் பற்றி பிரிட்டன் துணை பிரதமருடன் பேச்சு நடத்தப்படவில்லை.” என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (18) நடைபெற்றது. இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மீது தடைகளை விதிப்பதில் முக்கிய பிரிட்டன் துணைப் பிரதமர் டேவிட் லாமி முக்கிய பங்கு வகித்தார் என சிங்கள தேசியவாத அமைப்புன் குற்றஞ்சாட்டி இருந்தன. இந்நிலையில் படையினர்மீதான தடைகள் பற்றி பேசப்பட்டதா என […]

உலகம்

அழகுசாதன அறுவை சிகிச்சையை உடனடியாக இரத்து செய்யுமாறு அழைப்பு!

  • February 18, 2026
  • 0 Comments

பிரேசிலில் அழகுசாதன அறுவை சிகிச்சையான  பட் லிஃப்ட் (butt lifts) சிகிச்சை முறையை இரத்து செய்யக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். நோயாளிகளின் பாதுகாப்பு தொடர்பான கடுமையான கவலைகள் காரணமாக, இந்த சிகிச்சைமுறையை ஆலோசனை இன்றி இரத்து செய்ய வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை அல்லாத அழகுசாதன நடைமுறைகளுக்கான உரிம முறையை செயல்படுத்துவதில் அமைச்சர்கள் மெதுவாக செயல்படுவதாக பெண்கள் மற்றும் சமத்துவக் குழு (WEC) விமர்சித்தது. பயிற்சி பெறாத நபர்களால் சுகாதாரமற்ற அமைப்புகளில் நடைமுறைகள் […]

இலங்கை

இலங்கை, நெதர்லாந்து இரு தரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இணக்கம்!

  • February 18, 2026
  • 0 Comments

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் Wiebe De Boer, பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை மரியாதை நிமித்தம் சந்தித்து பேச்சு நடத்தினார். பாதுகாப்பு அமைச்சில் நேற்று மேற்படி சந்திப்பு நடைபெற்றது. பாதுகாப்பு செயலாளர் , நெதர்லாந்து தூதுவரை வரவேற்று அவருடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது, இரு தரப்பினரும் பரஸ்பர நலன்களைக் கொண்ட விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாறிக் கொண்டனர். அத்துடன், இலங்கைக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளை ஆராய்ந்தனர். […]

விளையாட்டு

பாகிஸ்தான் அணியின் தலைவிதி இன்று நிர்ணயம்!

  • February 18, 2026
  • 0 Comments

T -20 உலகக்கிண்ண தொடர்பில் இன்றும் (18) மூன்று லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்திய India அணி 36 ஆவது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தை Netherlands இன்று எதிர் கொள்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறும். இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளதால் இன்றைய போட்டியின் வெற்றி, தோல்வி அடுத்த சுற்று தொடர்பில் தாக்கத்தை ஏற்படுத்தாது. டெல்லியில் இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் 34 ஆவது லீக் போட்டியில் ஐக்கிய […]

error: Content is protected !!