இலங்கை செய்தி

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்ககோரி யாழில் போராட்டம்!

  • February 26, 2026
  • 0 Comments

“பழசும் வேண்டாம், புதுசும் வேண்டாம்” எனும் தொனிப்பொருளில், பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கக் கோரி நாளைமறுதினம் (28) சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது. தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இப்போராட்டம், அன்றைய தினம் காலை யாழ். பொது நூலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகவுள்ளது. அங்கிருந்து பேரணியாகச் செல்லும் போராட்டக்காரர்கள், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தை சென்றடைந்து தமது கோரிக்கைகளை முன்வைக்கவுள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, தாயகச் செயலணியின் பிரதிநிதிகள் […]

உலகம்

உலகளாவிய கடன் $348 டிரில்லியனை எட்டியது : மேற்குலக நாடுகளே பிரதான காரணம்!

  • February 26, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலகளாவிய கடன் $348 டிரில்லியனை எட்டியுள்ளதாக வங்கி வர்த்தகக் குழு நேற்று அறிவித்தது. கொரோனா தொற்றுநோய் பரவலுக்கு பிறகு, கடன் தொகையானது ஆண்டுக்கு கிட்டத்தட்ட $29 டிரில்லியன் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த அதிகரிப்பு முதன்மையாக அரசாங்கங்களால் உந்தப்பட்டது, அவை $10 டிரில்லியனுக்கும் அதிகமான உயர்வுக்குக் காரணமாக இருந்ததாகவும், அமெரிக்கா, சீனா மற்றும் யூரோ பகுதி ஆகியவை இந்த உயர்வுக்கு சுமார் முக்கால் பங்கிற்கு காரணமாக இருந்தன என்றும், சர்வதேச நிதி நிறுவனம் […]

விளையாட்டு

அரையிறுதி வாய்ப்பை நிர்ணயிக்கும் மிக முக்கிய போட்டி இன்று!

  • February 26, 2026
  • 0 Comments

T-20 உலகக்கிண்ண தொடரின் சூப்பர் 8 சுற்றில் இந்தியா India மற்றும் சிம்பாப்வே Zimbabwe அணிகள் இன்று (26) மோதுகின்றன. சென்னை Chennai சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா சூப்பர் 8 சுற்றில் முதல் போட்டியில் தென்னாபிரிக்காவிடம் 76 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமெனில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றியை பெற வேண்டும். சிம்பாப்வே லீக் […]

விளையாட்டு

இலங்கை அணி ‘அவுட்’: ரசிகர்கள் கடும் சீற்றம்!

  • February 26, 2026
  • 0 Comments

இலங்கை Sri Lankan அணியின் தொடர் தோல்விகளால் அவ்வணியின் ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். தற்போதைய அணிமீது கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். நேற்றைய ஆட்;ட முடிவில் மைதான வளாகத்திலும், சமூகவலைத்தளங்களிலும் கடும் விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர். இலங்கை அணியை கட்டியெழுப்ப முடியாது என முரளிதரன் வெளியிட்ட கருத்தை பலரும் ரீ போஸ்ட் செய்துவருகின்றனர். 20 உலகக் கிண்ண தொடரில் நேற்று ஆர். பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து, இலங்கை அணிகள் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து New Zealand அணி […]

இலங்கை செய்தி

பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்தவர் மடக்கி பிடிப்பு: யாழில் பரபரப்பு!

  • February 26, 2026
  • 0 Comments

யாழ். சுன்னாகம் நகர் பகுதியில் வீதியால் நடந்து சென்ற பெண்ணின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட்ட இராணுவச் சிப்பாயென சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு, பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சுன்னாகம் நகர்ப் பகுதியில் பெண் ஒருவர் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த நபர் ஒருவர் திடீரென அப்பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோட முயன்றுள்ளார். இதன்போது, அப்பெண்ணின் சத்தத்தைக் கேட்டு திரண்ட பொதுமக்கள், கொள்ளையனைத் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பிடிபட்ட நபரைச் […]

ஐரோப்பா

லூவ்ரே அருங்காட்சியகத்தை வழிநடத்த புதிய தலைவர் நியமனம்!

  • February 25, 2026
  • 0 Comments

பிரான்ஸின் லூவ்ரே அருங்காட்சியகம்  கொள்ளை, பாதுகாப்பு குறைப்பாடு மற்றும் டிக்கெட் விநியோக முறைக்கேடு என பல சிக்கல்களை சந்தித்த நிலையில்,  லாரன்ஸ் டெஸ் கார்ஸ்  (Laurence des Cars) தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் லூவரின் புதிய தலைவராக கிறிஸ்டோஃப் லெரிபால்ட் (Christophe Leribault) நியமிக்கப்பட்டுள்ளார். “கட்டிடம், சேகரிப்புகள் மற்றும் மக்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நம்பிக்கையின் சூழலை மீட்டெடுப்பது மற்றும் அனைத்து குழுக்களுடன் சேர்ந்து அருங்காட்சியகத்திற்குத் தேவையான மாற்றங்களை […]

ஐரோப்பா முக்கிய செய்திகள்

புத்தாண்டு தீ விபத்தில் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க தயாராகும் சுவிஸ்!

  • February 25, 2026
  • 0 Comments

கிரான்ஸ்-மொன்டானா  (Crans-Montana) ஸ்கை ரிசார்ட்டில் புத்தாண்டு தினமன்று ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக 50,000 சுவிஸ் பிராங்குகளை  (S$81,660) வழங்குவதாக சுவிட்சர்லாந்து அறிவித்துள்ளது. இந்த தீ விபத்தில் 41 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவான நிதி உதவியை வழங்குவதையும், இரக்கத்தின் அடையாளமாக செயல்படுவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் ஆளும் கூட்டாட்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கூட்டாட்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொள்கையளவில், இந்த […]

உலகம்

ஜெனீவாவில் மீண்டும் சந்திக்கும் அமெரிக்கா, ஈரான் பிரதிநிதிகள்!

  • February 25, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடனான மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையில் நல்ல பலன் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார். தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக ஈரான் சார்பான தூதுக்குழு இன்று ஜெனீவாவிற்கு புறப்பட்டுள்ள நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப் (Steve Witkoff)  மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் (Jared Kushner) ஆகியோர் நாளைய தினம் ஜெனீவாவில் அப்பாஸ் அரக்சி (Abbas Araghchi) […]

ஐரோப்பா

சுற்றுலா பயணிகளுக்கான வரியை உயர்த்திய ஐரோப்பிய நாடு!

  • February 25, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் – பார்சிலோனா (Barcelona)  நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கான வரியை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது. இதற்கமைய விடுதிகளில் தங்கும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு இரவுக்கு €15 (S$22.35) யூரோ வரை வரி விதிக்கப்படலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், மலிவு விலை வீடுகளுக்கு நிதியளிக்கவும் இந்த வரி பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய கட்டலோனியாவின் (Catalonia) பிராந்திய நாடாளுமன்றம், ஏப்ரல் முதல் பார்சிலோனாவில் உள்ள ஹோட்டல் விருந்தினர்களுக்கான வரியை ஒரு இரவுக்கு அதிகபட்சமாக €10 முதல் €15 […]

அரசியல் இலங்கை செய்தி

சுரேஷ் சலேவின் கைது பழிவாங்கல்: கம்மன்பில குற்றச்சாட்டு!

  • February 25, 2026
  • 0 Comments

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேயின் கைது பழிவாங்கல் நடவடிக்கையென முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில Udaya Gammanpila குற்றஞ்சாட்டியுள்ளார். புலிகளுக்கு எதிரான போரின்போது சுரேஷ் சலே பங்களிப்பு வழங்கியுள்ளார். எனவே, அவரை பழிவாங்குவதற்குரிய எண்ணம் பிரிவினைவாத சக்திகளுக்கு இருக்கலாம் எனவும் கம்மன்பில சுட்டிக்காட்டினார். பிரதான சூத்திரதாரி யாரென கண்டுபிடிக்கப்பட வேண்டும். மாறாக அப்பாவி திட்டமிட்ட அடிப்படையில் தண்டிக்கப்படுவதை நாம் ஏற்கமாட்டோம். அநீதிக்கு எதிராக முன்னின்று செயல்படுவோம் எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.

error: Content is protected !!